திங்கள், 19 செப்டம்பர், 2011

பரிணாமம்?????


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  

உங்கள் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.


------------------
பரிணாமம் குறித்த அனைத்து கட்டுரைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 
---------------
பரிணாம கோட்பாடு (Evolution Theory) - இவ்வுலகில் உயிரினங்கள் எப்படி வந்திருக்கும் என்பதை விளக்க முயற்சிக்கும் கோட்பாடு. டார்வின் மூலமாக பிரபலமாக துவங்கிய இந்த கோட்பாட்டின்படி உயிரினங்கள் தற்செயலாக வந்திருக்க வேண்டும், ஒன்று மற்றொன்றாக காலப்போக்கில் மாறியிருக்க வேண்டும். இந்த அளவுகோல்படியே மனிதனும் வந்தான். அதாவது, உயிரினங்கள் ஒவ்வொன்றாக மாறி பின்னர் குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்திருக்க வேண்டும் என்று விளக்குகின்றது இந்த கோட்பாடு. 

இந்த கோட்பாடு முன் வைக்கப்பட்டதிலிருந்தே பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, இந்த கோட்பாடு வெறும் யூக அடிப்படையில் அமைந்தது என்பதுதான். இன்று வரை பரிணாமம் நடந்ததை நிரூபிக்கக்கூடிய ஆதாரங்கள் நமக்கு கிடைக்கவில்லை. டார்வினும் இதே போன்றதொரு சந்தேகத்தை கொண்டிருந்தார். ஆனால் தோண்டி எடுக்கப்பட்ட உயிரினப்படிமங்கள் குறைவே என்றும் பிற்காலத்தில் படிமங்கள் அதிகளவில் கண்டுபிடிக்கப்படும் போது தன்னுடைய ஆருடம் பலிக்கும் என்றும் நம்பினார். ஆனால் அன்று அவருக்கு கிடைக்காதது இன்று வரை அவரது ஆதரவாளர்களுக்கும் கிடைக்கவில்லை. பரிணாமத்திற்கு எதிரான ஆதாரங்கள் தான் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனவே தவிர பரிணாமம் நடந்ததற்கு ஆதரவாக இதுவரை ஒரு ஆதாரமும் இல்லை. 

ஒரு செயல்படக்கூடிய சிஸ்டத்தில், inputகள் மாறினால் outputகளும் மாறும். ஆனால் பரிணாமத்தை பொறுத்தவரை inputகள் மாறிக்கொண்டே இருக்கின்றனவே தவிர, output மட்டும் மாறவே இல்லை. அதாவது, "பரிணாமம் நிச்சயம் நடந்திருக்க வேண்டும்" என்ற output மட்டும் மாறவே மாட்டேன் என்று அடம்பிடிக்கின்றது. 

பரிணாமம் உண்மை என்று சாதிக்க முயலும் சகோதரர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறுவதால் அது உண்மையாகாது.

அறிவியேலே அல்லாத, நிரூபிக்கப்படாத இந்த கோட்பாட்டை நாத்திகர்கள் தங்களது கொள்கையை நியாயப்படுத்த துணையாக கொள்வது ஆச்சர்யமளிக்கும் உண்மை. பரிணாம கோட்பாடு உண்மையாக இருந்தால் கூட அதை வைத்து கொண்டு இறைவனை மறுக்க முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் அதனை கொண்டு இறைவனை மறுப்பது அறியாமையின் உச்சம்.

மனிதர்களில் உயர்வு தாழ்வு என்று பேதம் கற்பிக்கும் வர்ணாசிரமத்தை தீவிரமாக எதிர்க்கும் நாத்திகர்கள், எப்படி உலக மக்களிடையே உயர்வு தாழ்வை கற்பிக்கும் பரிணாமத்தை ஏற்றுக்கொள்கின்றார்கள்? இனவெறியால் பலரும் பாதிக்கப்பட பரிணாமமே காரணம் என்பதை எப்படி மறந்தார்கள்? 

பல நாத்திகர்களின் மதமான பரிணாம கோட்பாடிற்கு ஆதாரங்கள் இல்லை என்பதையும், அது யூகமாக (Hypothesis) இருக்க கூட தகுதி இல்லாதது என்பதையும் இந்த தளத்தில் உள்ள பரிணாமம் குறித்த கட்டுரைகள் மூலம் விளக்க முயற்சித்துள்ளேன். என்னுடைய கருத்துக்களை வெறுமனே சொல்லாமல் அதற்கு ஆதாரமாக அறிவியல் உண்மைகளையும், பரிணாமவியலாளர்களின் கருத்துக்களையும் கொடுத்துள்ளேன். 

இந்த தளத்தில் உள்ள பரிணாமம் குறித்த கட்டுரைகளை வாசிக்கும் சகோதர/சகோதரிகளுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள், இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளை அப்படியே ஏற்காமல் பரிணாமம் குறித்து நீங்களே தெளிவாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வாருங்கள் என்பதுதான்.  

மேலும், பரிணாமம் குறித்த கட்டுரைகளின் பின்னூட்ட பகுதியில் நாத்திகர்களுடனான எங்களது உரையாடல்களும் உள்ளன. அவையும் உங்களுக்கு உதவலாம்.      

8. பரிணாமம் குறித்து மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள்,
9. பரிணாமம் குறித்து ஆசிரியர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வுகள்.
10. குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்தானா?
11. பரிணாமம் உண்மையாக இருந்தால் கூட அதனை வைத்து இறைவனை மறுக்க முடியுமா?  


என பரிணாமம் குறித்து பல தலைப்புகளில் இந்த தளம் அலசுகின்றது,


--------------------
பரிணாமம் குறித்து இந்த தளத்தில் உள்ள அனைத்து கட்டுரைகளின் தொகுப்பு பின்வருகின்றது 

-----------------------------


தங்களுடைய ஆர்வத்துக்கு என்னுடைய நன்றிகள். தாங்கள் உண்மையை கண்டறிய எல்லாம் வல்ல இறைவன் உதவுவானாக...... ஆமீன்.

நன்றி

http://www.ethirkkural.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக