வெள்ளி, 2 செப்டம்பர், 2011

தினம் ஒரு அத்தியாயம்: அத்தியாயம் 01

                                        அல்ஃபாத்திஹா(தோற்றுவாய்)


1:1   بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

1:1. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

1:2   الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

1:2. அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

1:3   الرَّحْمَٰنِ الرَّحِيمِ

1:3. (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.

1:4   مَالِكِ يَوْمِ الدِّينِ

1:4. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).

1:5   إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

1:5. (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

1:6   اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ

1:6. நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!

1:7   صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

1:7. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.

நன்றி
http://www.tamililquran.com   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக